எண்ணின் மகிமை
எண்ணைத்தந்த இறைவன் அத்துடன் எண்ணமும்
எண்ணத்தொடங்கிய இவனோ எண்ணத்திலிருந்து
எண்ணுவதை விடவில்லை அந்த பாழும் பணத்தை
இறைவன் நாமத்தை மனதில் இருத்தி எண்ணுவதை
இவன் ஓர் எண்ணிக்கை என்றே நினைப்பதில்லை
எண் ஏன் தந்தான் இறைவன் இனி எண்ணுவோமா