எண்ணின் மகிமை

எண்ணைத்தந்த இறைவன் அத்துடன் எண்ணமும்
எண்ணத்தொடங்கிய இவனோ எண்ணத்திலிருந்து
எண்ணுவதை விடவில்லை அந்த பாழும் பணத்தை
இறைவன் நாமத்தை மனதில் இருத்தி எண்ணுவதை
இவன் ஓர் எண்ணிக்கை என்றே நினைப்பதில்லை
எண் ஏன் தந்தான் இறைவன் இனி எண்ணுவோமா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Mar-20, 1:26 pm)
Tanglish : ennin magimai
பார்வை : 68

மேலே