காமமும் காதலும்

முன்னும் பின்னும் முரனாயிருந்தும்
ஒன்றாய் இருப்பது காமமும் காதலும்
காமம் உடலோடு ஒட்டி உறவாடும்
உறவு உடலோடு ஒன்றி வந்தும் போவதும்
காதலும் உடலைத்தான் சேர்ந்தது மனதை
மனத்தைக் காண முடியாது காதலையும்
நினைக்கின்றோம் மனதால் வளர்க்கின்றோம்
காதலை மனதால் மனதின் துணைக்கொண்டு
காமம் போர்க்களமென்றால் காதல் ஒரு
அமைதி பூமி இருந்தும் இவை இரண்டும்
உடலில் அடக்கம் முன்னும் பின்னும் முரணாய்
உடல் போனபின்னே அழிந்திடும் காமம்
அழியாது நிற்பதோ காதல் உடலுக்கப்பால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Apr-20, 1:32 pm)
பார்வை : 339

மேலே