India lights out

ஈராறு தினங்களாய்
வீட்டு சிறையில்
கூட்டு புழுவாய் நீ - இனியவளை
பாராது போனதில்
பட்ட மரமாய்
மொட்ட மாடியி்ல் நான்

காத்திருந்த காலம் வந்ததும்
ஊரெங்கும் இருள் சூழுது
காரிருளில் ஒளி முளைக்குது
வேர்த்திருந்த விழிகளுக்கு விருந்தாய்
எதிர்வீட்டில் அவள் வருகிறாள்
கதிர்ஒளியில் முகம் மிளிர்கிறாள்

முன்பு பார்த்த முகந்தானா
மூச்சு முட்டுது முதல் முறையாய்
இது என்ன இதய துடிப்பா
இல்லை இல்லை வான வெடிகள்

கனவு போன்ற இந்நிகழ்வை
மூலை முடுக்கெல்லாம் ஒளியேற்றி
களித்து ஆடி கொண்டாடி விட்டோம்
நானும் எனக்காக ஊர்மக்களும்

எழுதியவர் : (8-Apr-20, 6:04 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 44

மேலே