தனிமையும் நானும்
நடந்து செல்ல தூரம்
குறையாத நினைவு
கலங்கிய மனநிலையில்
மருவிய மெய்யணா்வு என் தனிமை..
தொலைதூர நிலவு தனித்திருப்பது
பேரழகு தானே…
என் நினைவும் தனிமையில் செல்கிறதே
அழகாய் தோணதனே…
என்னை எதிர்க்க யாருமில்லை
யாரிடமும் நான் புறங்௯றவில்லை
தனிமையில் உலகை ரசிக்கிறேன்
தவிர்க்கிறேன் என்றுணராதே…
நிழல் ௯ட மிதிக்கப்படுவதில்லை
நோய் தொற்றுக்௯ட நெருங்குவதில்லை
மண் வாசமும் என்னை விட்டு செல்வதில்லை
மனதில் பகைமை வளா்வதுமில்லை…
தோல்விக்கு சிறந்த மருந்தும்
அறிவை ௯ர்மையாக்கவும்
தனிமையே சிறந்ததாகும்… .