வருவாயே

வருவாயே

(தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த .........தனதான )

கருவாக வந்து களமாக நின்று
கலங்கா திருக்கும் .... நிலைகாணும்
பொருளாசை யின்றிப் புதுவாழ்வு கண்டு
பொலிவா யிருக்க ..... நினைவேனை
இருளாகி நிற்கும் இடரோடி வீழ
இனிதா யுரைக்குங் ........ கவிவாழ
அருளாகி யென்ற னடினாவி னின்று
அழகா யுரைக்க ...... .வருவாயே

எழுதியவர் : கவித்தலம் கை.அறிவழகன் (30-Apr-20, 8:23 pm)
பார்வை : 76

மேலே