கவிஞன் என்பவன்

உள்ளுக்குள் இருக்கும்
உணர்வுகளை
உறங்க வைக்காமல்
உலகமறிய உரக்க சொல்பவன்!

நாம் காண முடியாத உலகை
தன் கற்பனை மூலம்
கவிதையாய் படைத்து
அதை நம் கண் முன் கொண்டு வந்து
விருந்து அளிப்பவன்!

வாழ முடியா வாழ்க்கையை
தன் வரிகளினால் வாழ வைக்கும்
அனைத்து கவிஞர்களுக்கும்
இக்கவிதை சமர்பணம்..!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:07 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : kavingan enbavan
பார்வை : 925

மேலே