குள்ளநரிக் கூட்டம்

குள்ள நரிக் கூட்டம் பல ஊருக்குள்ளே திரியுது.....

குள்ள நரிக் கூட்டம் பல
ஊருக்குள்ளே திரியுது
கூடி சேர்ந்து கும்மியடிச்சு
கொள்ளையடிக்க பாக்குது

அனாமத்து நிலத்த மடக்கி
கொட்டா ஒன்னு போடுது
அடுக்கடுக்கா பொய்ய சொல்லி
பட்டா போட்டு விக்குது

அரசாங்க வேலனு
ஆசக்காட்டி கரக்குது
அரசியல் பலத்தோடு
அப்புறம் கம்பி நீட்டுது

பில்லி சூனியம் ஏவலுன்னு
தாயத்தக் கட்டி
தகடு அடிச்சி வித்து
ஏமாளிக எல்லாரையு
கோமாளிகளா ஆக்குது....

அதிர்ஷ்டக் கல்லால அம்பானி யோகமென
கலர் கலரா கட்டுக் கதைய விட்டு
கண்ணாடிக் கல்லவித்து
கல்த்தா கொடுக்குது....

அரிசி பருப்பிலையு உயிர காக்கும் மருந்திலையு
எக்கச்சக்கமா கலப்படம் பண்ணுது
ஏழைங்க உயிரத் தின்னு
லாபம் பண்ணுது

வாயக் கட்டி வயித்த கட்டி
வருங்காலத்துக்கு சேர்த்த பணத்த
வட்டியக் கூட்டி வசமா வாங்கி
அம்பேலாகி சீட்டுக் கம்பனி
அல்வா கொடுக்குது

இந்த ஏமாத்து நரிகளெல்லா ஊருக்குள்ள இருக்குதுங்க
நோட்டம் பண்ணி வாட்டம் பார்த்து
ஊர ஏய்க்கப் பாக்குதுங்க ....

இந்த நாசக்கார நரிக்கூட்டத்த நம்பிடாதிங்க
இருக்கிறதெல்லா தொலச்சி
தெருவுல நின்னுடாதிங்க....,!

எழுதியவர் : வை.அமுதா (5-May-20, 1:43 pm)
பார்வை : 55

மேலே