தொப்புள் கொடி தொலைத்த அம்மாக்கள் கவிஞர் இராஇரவி

தொப்புள் கொடி தொலைத்த அம்மாக்கள்!
கவிஞர் இரா.இரவி !

இந்த உலகிற்கு நீ வர காரணமானவள்
இந்த உலகை உனக்கு அறிமுகம் செய்தவள் !

தன் ரத்தத்தை பாலாக வழங்கியவள்
தன் துக்கத்தை தள்ளி வைத்ததவள் !  

.பாசத்தோடு வளர்த்த மகன் மணமானதும்
பாசம் மறந்து அம்மாவைப்  பிரிந்தான் !

தொப்புள் கொடி உறவான மகனை மறக்காது
தவித்து வருகிறாள் பெற்ற தாய் !

மனைவியை மதித்திடு தவறு இல்லை
மண்ணில் வாழும் தெய்வத்தை மறக்காதே !  

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (11-May-20, 5:22 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 68

மேலே