கருவில் கேட்கும் கவிதை

ஓர் அழகிய கவிதை அது..
காகிதத்தில் சிக்காத கவிதை அது..
எழுதுகோல் தொடாத கவிதை அது...
எழுத்துக்களால் வடிக்காத கவிதை அது...
வார்த்தைகளால் வடிவம் பெறாத கவிதை அது...
ஓசை இன்றி ஆசையோடு சொல்லும் கவிதை அது...
காணாத ரசிகனுக்கான ரகசிய கவிதை அது...
காண விரும்பி கனவில் எழுதிய கவிதை அது...
என்ன கவிதை அது?
தினம் அன்னை பேசும் கவிதை அது...
கருவில் இருக்கும் பிள்ளை கேட்கும் கவிதை அது...

எழுதியவர் : Krupa (11-May-20, 6:04 pm)
சேர்த்தது : Aarooran
பார்வை : 906

மேலே