போட்டின்னா போட்டிதான்டா

டேய் பங்காளி பரமசிவம். நானும் வெவ்வேறு தாய் வயித்து பிள்ளைகளா இருந்தாலும் ஒரே நாள்ல ரண்டுபோரும் பொறந்தோம். நம்ம ரண்டு பேருக்கும் ஒரே நாள்ல ஒரே மணமேடையில் கல்யாணம் பண்ணீட்டோம். இரட்டைப் பிறவிப் பொண்ணுங்க. நமக்கு ஒரே நாள்ல பெண் கொழந்தைங்க பொறந்தாங்க. நான் எம் பொண்ணுக்கு 'துர்கா'-ன்னு பேரு வச்சிட்டேன். உம் பொண்ணுக்கு 'துர்'-,னு ஆரம்பிக்கிற மாதிரி ஒரு பேரு வைடா பாக்கலாம். போட்டின்னா போட்டிதான்டா. என்னாட்டம் மீசையை முறுக்கி சவால்விடுடறா பாக்கலாம்.
@@@@@@
அடேய் பங்காளி அங்கப்பா. நானும் மீசையை முறுக்கி உஞ் சவாவை ஏத்துக்கிறன்டா. எம் பொண்ணுப் பேரு 'துர்'ன்னு தான்டா ஆரம்பிக்கணும். ஒரு பேரு என்னடா. பல பேரைச் சொல்லறேன் கேட்டுக்கடா. துர்காதேவி, துர்காவதி, துர்பாக்கியா, துர்வதி, இப்ப என்னடா சொல்லற? இதில என் மனைவி மங்கைக்கு பிடிச்ச பேரை எங்க பொண்ணுக்கு வைக்கப்போறாம்டா பங்கு அங்காளப்பா.
@@@@@@
நீ போட்டில செயிட்டுடீடா பங்கு.

எழுதியவர் : மலர் (22-May-20, 11:17 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 54

மேலே