பூவிழியின் பொன்மகரந்தங்கள்

முகத்தா மரையினில் முல்லை யினைவைத்து
செவ்விதழில் செந்தமி ழைவிரித்தாய் பூவிரியும்
பூவிழியின் பொன்மகரந் தங்கள் கவிதைக்கு
சந்தங்கள் நல்கு தடி !

-----பல விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (26-May-20, 9:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே