வளம்பெறாது

மக்களையும் மனிதர்களாக
மதிக்கும் அரசியல்வாதிக்கு
அன்பான பேச்சு
ஆழமான எண்ணம்
இனிய புன்னகையோடு
ஈகை குணமும்
பிறர் உள்ளம் கவர்ந்திட
ஊன்றுகோலாகாதோ!

ஒரு தாய் மக்களென
அனைவரும் ஒன்றுபட்டால்
முறைபடுத்த
முடியாதது
புவியில் ஏதுமில்லை
வரையறுக்கப்படாதவரை
வாழும் மாந்தரும், மண்ணும்
வளம் பெறாது, உயர்வடையாது.

எழுதியவர் : கோ. கணபதி. (29-May-20, 8:23 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 53

மேலே