அடங்க மறு

கையில் இரும்பென நினைத்துவிட்டால்....
நீயிரு இறுதிவரை இப்படியே...

இரும்புக் கையென கருதிவிட்டால்...
உடைத்தெறி துரும்பென இரும்பினையும்...

கோபம் அனலாய் மாறாமல்...
தானாய் விலங்கு வளைந்திடுமோ....

இறுக்கும் இரும்பை இறுக்கிப்பிடி...
உருகி உந்தன் வேகத்தில் அடி...

இப்போ வளைந்து கொடுக்குது பார்...
வெற்றியுன் காலில்
கிடக்குது பார்...

எழுதியவர் : இரா.இரஞ்சித் (11-Jun-20, 12:24 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : adanka maru
பார்வை : 3674

மேலே