இதயத் தூண்டல்💓💓💓

என் அல்லி மலரே..!
விளக்குகள் அணைத்து இரவின்
வினைகள் புரியும் வேளையிலே..!
எத்தனையெத்தனை நாட்கள்
என் தூக்கம் பறித்தாய்....
ஆனந்த மழைதனின் ஓசையிலே..!
ஆயிரமாயிரம் ஆவல்கள்....
அள்ளஅள்ளக் குறையா தேனமுது
தெவிட்டாத அதிசயம் அது....
ஆரஞ்சு புடவைதனில் நீ
ஆனந்தமாய் சிரிக்க என்
பேரன்பைப் பரிசளித்தேன் உனக்கு....
கனியே..! தேன் கசியும் இதழே..!
அங்கு மலர்ந்தது அல்லி மட்டுமல்ல,
என் இதயத் தூண்டலும் தான்..!!

வேல் முனியசாமி.


எழுதியவர் : வேல் முனியசாமி (10-Jun-20, 11:53 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 170

மேலே