ஆன்மீக மின்னல்கள்

கவிதை

ஆன்மீக மின்னல்கள் கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

உலகில்
தவறும் பொருளை
தவறாமல் உரியவரிடம்
தரும்போது நன்றி
தவறாமல் கூறுகிறோம் !

நமக்காக
பலகோடி உயிர்களை
உலகில் படைத்து
நம்மை மகிழ்விக்கும்
கடவுளுக்கு நன்றி
கூற வேண்டாமா?

உலகில்
உண்மையாக வாழ்ந்தால்
துன்பம் துயரம் வரும்
துவண்டு விடாதே
துடித்து விடாதே !

சில நேரங்களில்
சில மனிதர்களிடம்
பேசாமல் மெளனமாக
இருந்து பாருங்கள்
அமைதி கிடைத்து விடும் !

பேச்சின் ஆற்றல் தீப்பொறி
புரிந்து கொண்டு
பேச்சைக் குறைத்து
நல்லெண்ணம் வளர்த்தால்
நாம் வாழும் உலகமே
நம் வசப்படும்!

உலகில்
எவ்வுயிரும் தன்னுயிர்போல்
நினைத்து வாழ்ந்தால்
நிம்மதிக் காற்று
உன்னை நோக்கி வீசும்!

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (15-Jun-20, 10:49 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : aanmeega minnalkal
பார்வை : 191

மேலே