உன்னைத் தவிர 💖

உன்னைத் தவிர
ஒருவருக்கும் தெரிவதில்லை
சோகங்களின் வேர்களில்
சீழ் பிடித்த என் நாட்களை...
உன் வரவில்
ஒளி பெரும் என் அறை.
மின் விசிறி ஓய்வெடுக்க
மெல்ல வீசும் தென்றல்.
நீ போனபின் வந்து
அமர்ந்து கொண்ட நிச்சலனம்
நெடுநேரம் வரை போகவில்லை.
அறையின் வாசல் வரை
அடிக்கடி வந்து
எட்டிப்பார்த்து போகிறது
தென்றல்
உன்னைத் தவிர
ஒருவருக்கும் தெரிவதில்லை
சோகங்களின் வேர்களில்
சீழ் பிடித்த என் நாட்களை...
-----------------------
-----------------------