உப்பளத்தில்

வெயிலால் வந்திடும் விளைச்சலிது
வேர்வைச் சுவைதான் உப்புயிது,
பயிர்போல் விளையும் வயலினிலே
படிகமாய் மாறிடும் கடல்நீரே,
வயிற்றுப் பிழைப்புப் பலர்க்கிதுவே
வயிற்றி லடித்திடும் மழைவந்தே,
கயிற்றில் நடப்பதாய் வாழ்க்கையிது
காணீ ராங்கே உப்பளத்திலே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Jun-20, 5:45 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 41

மேலே