இனிமையான காதல் கவிதை

🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰

*கவிதை*

படைப்பு; *கவிதை ரசிகன்*

🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰

"கோவிலில்
தெய்வம் இல்லை" என்று
சொன்ன நீ....
வெள்ளி கிழமைக்கண்டால்
கோவிலுக்கு வருகிறாய" என்று
கேட்பவர்களிடம்....
அடி பெண்ணே!
நான்
எப்படி சொல்வேன்...?
வெள்ளி கிழமை
கண்டால்தான்
என் தெய்வம்
கோவிலுக்கு வருகிறது என்று....!

💘💘💘💘💘💘💘💘💘💘💘

ஏய் பெண்ணே!
என்னோடு பேசத்துடிக்கும்
உன் உதடுகளை
பற்கலால்
கடித்துக் கொண்டு போகலாம்...
ஆனால்
என்னோடு
பேசிக்கொண்டிருக்கும்
உன் மனதை
என்ன செய்யப்போகிறாய்...

💘💘💘💘💘💘💘💘💘💘💘

என் ஐஸ் கிரீம் மட்டும்
வேகமாக கரைகிறதே.என்று
வருத்தப்படுகிறாய்....
அடி பெண்ணே!
உன்பார்வை பட்டாலே!
கல் மனமும் கரையும்...
ஆனால்
நீயோ!
ஐஸ் கிரீம்மை தொட்டுக்கொண்டிருக்கிறாய்...
பாவம்
அது
அதைத் தவிர
வேறென்ன செய்யும்....?

💘💘💘💘💘💘💘💘💘💘


மழை பெரியது
கடல் பெரியது
பூமி பெரியது
வானம் பெரியது
என்றெல்லாம் சொல்வார்கள்....
என்னவளே!
நான்
உன் மீது வைத்திருக்கும்
அன்பை அறியாதவர்கள்....!

*கவிதை ரசிகன்*


🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰

எழுதியவர் : கவிதை ரசிகன் (27-Jun-20, 9:09 pm)
பார்வை : 84

மேலே