ஏக்கம்
உன் கண்னை இன்னும் காணவில்லை
என் இதயம் தான் பேசவில்லை
என் புல்வெளியில் ஈரமில்லை
அந்த ஏக்கம் தான் தீரவில்லை
சுட்டுவிட்ட சுடரொளி தேய்கின்றதே
இம் முறையும் பூ மணம் வீசுகின்றதே
கடந்த இரவுகள் திரும்புமா
கனத்த மனம் தான் தூங்குமா
வாழ்வின் அர்த்தம் தான் புரியுமா
பல்லக்கில் அவள் ஏறி வருவாளோ
உள்ளுக்குள் அவள் புகுந்து சுடுவாளோ
காதலில் சிறை செய்து விடுவாளோ
என்னைத்தான் சிறை வைத்து விடுவாளோ
விழிகளால் விளக்கேற்ற வா
தனிமை என்பது கருமையா
உன் இதயம் என்ன வெண்மையா
கருமை வெண்மையும் தான் கூடுமா
என் இதயத்தின் துடிப்பாக மாறினாள்
என் வாழ்க்கையின் பொருளாக ஆகினாள்
என் கவிதையின் தலைப்பாக மாறினாள்
என் இசையில் ஸ்வரமாக ஆகினாள்
அவள் இல்லாமல் வாழவில்லையே !