புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 10---
புத்தன் வீட்டுப் பூக்கள் - ௧௦
91. ஒன்றை எதிர்நோக்கிக் காத்திருப்பதை விட
அதைத் தேடி பயணம் செய்.
92. வாக்கைக் கேட்டு வந்தவனிடம் பின்னாளில்
வாழ்க்கைக் கேட்டுச் செல்கிறான்.
93. அடுத்தவன் கண்ணீரில் கிடைக்கின்ற சந்தோசம்
அதிக நேரம் நிலைக்காது.
94. பக்தி என்பது மதத்தைச் சார்ந்ததல்ல
மனதைச் சார்ந்தது.
95. முதலில் வீட்டைச் சுத்தம் செய்
பின் வீதியைச் சுத்தம் செய்.
96. பிரச்சனையைப் பார்த்துப் பயந்து வாழ்வதை விட
அதனை எதிர்த்து நின்று இறப்பதே மேல்.
97. தொலையும் போது தான் தெரிகிறது
கிடைத்தப் பொருளின் அவசியம்.
98. சுடுவதெல்லாம் சூரியனாக இருக்க முடியாது
சுழல்வதெல்லாம் பூமியாக மாறிட முடியாது
உண்மை மட்டும் தான் நிலைத்திருக்கும்.
99. ஒற்றுமையை உடைத்து விட்டால்
எந்த வலிமையான அரசையும் வெல்வது எளிது.
100. எழுதுகோலே உறங்கி விடாதே
நிகழ்காலம் தலைகுணிகிறது
எதிர்காலமோ?... சிரிக்கக் காத்திருக்கிறது.
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு...