காதலை எழுதாத என் பேணா

ஆண்டுகள் சிலவும்,
மாதங்கள் பலவும் மாண்டுபோயின
மறந்தும் நான்;
உன்னையோ, உண்மையயோ
எழுதுவதில்லை.

நிர்பந்தம் ஏற்பட்டது!
ஆய்வுகளை,
அறிக்கை செய்ய; எழுத
எத்தனிக்கின்றேன் உண்மை மட்டும்;

என்னைப் புரியும்மடி உனக்கு!
உன்னை தவிர்த எனக்குள்
உயிர்போ, உண்மையோ
உதிக்காது என்று.

சரி! கவனமாகவே
கட்டுக் கட்டாய்; நான் உரைகள்
எழுதுகையில் கசிந்து விட்டால்
மையோடு, மெய்யும்;
மன்னிக்கவும்.

எழுதியவர் : பூ பாலச்சூரியன் (2-Jul-20, 4:53 pm)
சேர்த்தது : அப்துல்லாஹ்
பார்வை : 109

மேலே