கனவுத்திரையில் சிரிப்பது நீயோ

காற்றில் மிதந்து வருவது
கண்ணனின் குழல் இசையோ ?
காவிரி அலையில் மிதந்து வருவது
பொன்னியின் தமிழ்ப் புன்னகையோ ?
சேற்றில் மலர்ந்து செவ்விதழ் விரிப்பது
காலை எழுதும் கவித்தாமரையோ ?
மௌனமாய்ப் பார்த்து மனத்தைத் தொட்டு
கனவுத்திரையில் சிரிப்பது நீயோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-20, 4:15 pm)
பார்வை : 57

மேலே