கனவுத்திரையில் சிரிப்பது நீயோ
காற்றில் மிதந்து வருவது
கண்ணனின் குழல் இசையோ ?
காவிரி அலையில் மிதந்து வருவது
பொன்னியின் தமிழ்ப் புன்னகையோ ?
சேற்றில் மலர்ந்து செவ்விதழ் விரிப்பது
காலை எழுதும் கவித்தாமரையோ ?
மௌனமாய்ப் பார்த்து மனத்தைத் தொட்டு
கனவுத்திரையில் சிரிப்பது நீயோ ?