கடலோர கவிதை

அந்திசாயும் நேரம்
மஞ்சள் பூத்த வானம்
வீடு தேடி ஓடும்
பறவைகளின் ஒலி
விண்ணில் வந்து நிரம்பி
என் செவியிலும் அந்தொலிக்க
அவளுக்காக காத்திருந்த
நான் ,,,,,,, என்னையே மறந்திருக்க
பாதத்தின் கீழே ஏதோ ஆழ்ந்த வருடல்
நினைவுக்கு வந்தேன்
என்னவென்று பாதம் கொஞ்சம்
தூக்கி பார்த்தேன்
நண்டு ஒன்று அங்கே,,,,,
காலைதழுவியது அப்போது
வந்து ஓய்ந்த அலையொன்று
என் மனதில் அலையலையாய்
வந்து மோதியது அந்த மாலை வேளை
இதே கரையில் என்னையும் அவளையும்
சேர்த்து வைத்த இளந்தென்றல் ....
என்ன ஆச்சரியம்..... இன்றும்
இதோ அதே தென்றல் வந்து
என்னைத் தொட்டது .... நான் பின்னே
திரும்ப ..... என் கண்களை மூடியது
மென்மை விரல்கள் .... கண் திறந்தேன்
என்னை அணைத்து அவள்.....
தென்றல் மீட்டுத்தந்த அவள்
எங்களை இணைக்க வந்தது
பெரியதாய் வந்து ஓய்ந்த அலை !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Jul-20, 9:46 pm)
Tanglish : kadalora kavithai
பார்வை : 139

மேலே