ஒரு கொடியில் சின்ன சின்ன பூக்கள்
கவிதை
ஒரு கொடியில் சின்ன சின்ன பூக்கள்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
பிள்ளையார் சதுர்த்தியில்
பிள்ளையின் ஞாபகம்
பிள்ளையின் இறப்பு!
வீட்டு நூலகம்
அப்பாவின் ஞாபகம்
புத்தகம் படிக்கும்போது.
கிழிந்த மெத்தையில்
படுத்தே இருக்கிறது
நினைவுச் சுமைகள் !
வறண்ட குளத்தில்
துடித்துக் கொண்டிருந்தன
துள்ளிய மீன்கள்!
பதவி மோகத்தில்
விளைந்தன கட்சிகள்
பாவம் பொதுமக்கள்!
பொன்விலங்கு பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை