யார் யாரிடம் கற்றார்
இயற்கையின் திறந்த
நாடக அரங்கில்
கானகத்தின் குயில் பாட
கோலா மயில் நடனம்
ஆட கண்டேன் -மேடையில்
குயிலாய் ஒருத்தி பாட
கோல மயில்போல் அவள்
ஆடினாள்........
யாரிடம் இருந்து
யார் கற்றார் இங்கு
மனிதன் தான்
இயற்கையிடமிருந்து ஆடலையும்
பாடலையும் கற்றிருக்க வேண்டும்