இயற்கை அழிவு

இயற்கை கொடையாக
ஈன்றது நமக்கம்மா ,
நாகரிகம் வளர்ச்சியால்
அழிவுப்பாதை பிறக்குதம்மா ,
சாயப்பட்டரை சாயங்களோ
நதிநீரில் கலக்குதம்மா ,
உண்ட உயிர் வாழ்வதற்கு
மருத்துவம் தேடி அலையுதம்மா ,
விஞ்ஞான எழுச்சிக்கு
மெய்ஞானமோ மழுங்கியதம்மா ,
பசுமை உரம் தான் மறுத்தும்
பாலைவனம் ஆகுதம்மா ,
பேராசை செயல்களாலே
பேரழிவுக்கு தொடங்குதம்மா ,
அறியாத மாந்தர்களாய்
அறிவிழந்தது போதுமம்மா ,
கண்டு நீயும் விழித்தாலே
கவலைகள் நம்மில் தீருமம்மா ...

எழுதியவர் : ஆ.பிரவின் ராஜ் (31-Jul-20, 3:21 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
பார்வை : 499

மேலே