தாலாட்டு பாடல்

கண்ணான கண்ணே!
கண்ணான கண்ணே!
நீ கொஞ்சம் தூங்கடி
பொன்னான நெஞ்சே
புண்ணான நெஞ்சை
நீ கொஞ்சம் நீவடி
நான் காத்து நின்றேன்
நீ தூங்கும் நேரம்
நான் பார்த்து நின்றனே!
கனவுகள் பல கொண்டு நீ தூங்கடி!

ஆரா ராரிரோ! ஆரா ராரிரோ!
ஆரா ரரி ரரி ரோ! ரோ! ரோ!
ஆரா ரரி ரரி ரோ!

அன்னை மடியில்
அமைதியாய் நீ உறங்கடி!
தாலாட்டு நான் பாட
அன்பாய் நீ தூங்கடி!
தோழமை வளர
தோளில் நீ தூங்கடி
இதமாய் நான் தான்
உன்னை தட்டி கொடுக்க
தயங்காமல் நீ தூங்கடி!

ஆரா ராரிரோ! ஆரா ராரிரோ!
ஆரா ரரி ரரி ரோ! ரோ! ரோ!
ஆரா ரரி ரரி ரோ!

விண்மீன்கள் எல்லாம்
உனக்காய் மின்ன
நிலவும் உனக்கு இசைகள் பாட
நீ கண் உறங்கடி!
விண்ணோடும் மண்ணோடும்
நீ தான் விளையாடி
விருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றி
விம்மிடாமல் நீ தூங்கடி!

ஆரா ராரிரோ! ஆரா ராரிரோ!
ஆரா ரரி ரரி ரோ! ரோ! ரோ!
ஆரா ரரி ரரி ரோ!

- முத்து துரை சூர்யா

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (5-Aug-20, 12:19 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 97

மேலே