தமிழ்ப்பால்
தாய்ப்பாலின்றி தரணியில் பிறந்தேன்
தமிழ்ப்பால் அருந்திடவே
உனக்கே மகளானேன்
இதயத்தை அறுத்தாலும்
இசைத்திடுவேன் தமிழ் மொழியே!
மதிகெட்ட மாந்தர் என்னை
மனமின்றி கேட்கின்றனர்
எங்கே உன் தமிழன்னை?
மயங்காமல் நான் சொன்னேன்
மார்பகத்தில் சுரக்கின்றாள்.
சரவிபி ரோசிசந்திரா