சரவிபி ரோசிசந்திரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சரவிபி ரோசிசந்திரா
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Aug-2020
பார்த்தவர்கள்:  2523
புள்ளி:  124

என்னைப் பற்றி...

கவிஞர்/ஆய்வாளர்/எழுத்தாளர்/
எனக்குள் தேடுகிறேன் என்னை

என் படைப்புகள்
சரவிபி ரோசிசந்திரா செய்திகள்
சரவிபி ரோசிசந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2023 11:12 am

வெற்றிக்கு விருந்தளிக்கும் நாம்
தோல்விக்கு மருந்தளிக்க மறக்கிறோம்...

பேசாமல் நகர்வதும் பேசிவிட்டு செல்வதும்
பாசத்தின் வெளிப்பாடு
அன்பிற்கு இல்லை
எந்நாளும் பாகுபாடு

அமைதி அடைந்த பிறகு
மனம்
ஆசுவாசம் கொள்கிறது
முடிவில்...

வாழ்வை சுவாரஸ்யமாக்க
வெற்றிடமின்றி
நிரப்பி வையுங்கள்
அன்பை....

மேலும்

சரவிபி ரோசிசந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2022 11:07 am

உன் புகைப்படத்தை
ஓராயிரம் முறை
பார்த்து இருப்பேன்
ஏனோ நீ இன்னும்
பார்க்கவில்லை
என் குறுஞ்செய்தியை
காத்திருந்தால் காதல் அதிகரிக்கும் என்று
நானும் கூட
சிலாய்த்துப் பேசியது உண்டு
என் தோழியின் காதலுக்கு
தூது போன நாட்களில்
தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியுமென அப்போது தெரியாமல் போனது
ஏனோ! நீ இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறாய்
இம்மியளவும் மாறாமல்
உன்னை நினைத்து உண்ணவும் முடியாமல் உறங்கவும் இயலாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் கோட்டானாய் நள்ளிரவில்
நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா?
என நினைத்தால் நெஞ்சம் பஞ்சாய் வெடிக்கிறது
என்ன செய்ய நீயும்
கொள்கையின் வாரிசு தானே!
உன் க

மேலும்

சரவிபி ரோசிசந்திரா - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2022 2:19 pm

மற்றவர்கள் நம்மை கௌரவமாக நினைக்க ஆசைப்பட்டு
இழந்து வருகிறோம் நம் ஆசையை

மேலும்

தங்கள் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பைத் தெரிந்து கொள்ளலாமா? 01-May-2022 6:06 pm
மிக நன்று. தங்கள் தலைப்பு என்ன? எந்தளவில் இருக்கிறது? 22-Apr-2022 11:24 am
நான் முனைவர் பட்ட ஆய்வு மாணவி ஐயா. 20-Apr-2022 9:49 pm
உண்மையே! நியாயமான ஆசைகள் கூட போலிக் கௌரவத்தினால் நாம் இழக்கிறோம். நன்றி! சென்னையில் எங்கு பணி செய்கிறீர்கள்? 20-Apr-2022 2:56 pm

மற்றவர்கள் நம்மை கௌரவமாக நினைக்க ஆசைப்பட்டு
இழந்து வருகிறோம் நம் ஆசையை

மேலும்

தங்கள் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பைத் தெரிந்து கொள்ளலாமா? 01-May-2022 6:06 pm
மிக நன்று. தங்கள் தலைப்பு என்ன? எந்தளவில் இருக்கிறது? 22-Apr-2022 11:24 am
நான் முனைவர் பட்ட ஆய்வு மாணவி ஐயா. 20-Apr-2022 9:49 pm
உண்மையே! நியாயமான ஆசைகள் கூட போலிக் கௌரவத்தினால் நாம் இழக்கிறோம். நன்றி! சென்னையில் எங்கு பணி செய்கிறீர்கள்? 20-Apr-2022 2:56 pm
சரவிபி ரோசிசந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2022 2:19 pm

மற்றவர்கள் நம்மை கௌரவமாக நினைக்க ஆசைப்பட்டு
இழந்து வருகிறோம் நம் ஆசையை

மேலும்

தங்கள் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பைத் தெரிந்து கொள்ளலாமா? 01-May-2022 6:06 pm
மிக நன்று. தங்கள் தலைப்பு என்ன? எந்தளவில் இருக்கிறது? 22-Apr-2022 11:24 am
நான் முனைவர் பட்ட ஆய்வு மாணவி ஐயா. 20-Apr-2022 9:49 pm
உண்மையே! நியாயமான ஆசைகள் கூட போலிக் கௌரவத்தினால் நாம் இழக்கிறோம். நன்றி! சென்னையில் எங்கு பணி செய்கிறீர்கள்? 20-Apr-2022 2:56 pm
சரவிபி ரோசிசந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2022 2:18 pm

எல்லாவற்றிலும் முழுமை காண விரும்பும் நாம் தான்
பாதி வாழ்க்கையை தொலைத்துவிடுகிறோம் முழுமையாய்...

மேலும்

தவறு எப்போதும் சரியாகாது
ஆனால்
சரி தவறாகும் சிந்திக்காத சமயம்

மேலும்

நீ பேசுவது
உனக்காவது பயனளிக்கட்டும்

மேலும்

எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய்
என்னை நீ அழைத்து எங்கே சென்றாய்

தினந்தோறும் பணந்தேடி
எங்கே சென்றாய்
திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய்
உடலுக்குள் உயிர் காணாமல்
எங்கே சென்றாய்
உடலை தினம் பேணாமல்
எங்கே சென்றாய்

எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

எதிலும் நான் தெரிகின்றேன்
எங்கே சென்றாய்
எல்லாம் நான் அறிகின்றேன்
எங்கே சென்றாய்

பேதமின்றி அள்ளித் தந்தேன்
எங்கே சென்றாய்
பேரிடரிலும் துணை வந்தேன்
எங்கே சென்றாய்
மும்மலம் நீ அறியாமல்
எங்கே சென்றாய்
முற்பிறவி நீ தெரி

மேலும்

சரவிபி ரோசிசந்திரா - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2021 4:52 pm

நீயும் நானும் மழைநீரா!
நீந்தும் விழியில் உவர்நீரா!
உணவில் கலந்த உமிழ்நீரா!
உணர்வில் உறைந்த செந்நீரா!

யாரிடம் சொல்ல நம் கதையை
யாருக்கும் ‌யாரும் இங்குமில்லை
எங்கே செல்ல தெரியவில்லை
எனினும் வாழவா வழியில்லை

கடந்தது எல்லாம் போகட்டும்
கடப்பதில் மனம் மகிழட்டும்
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
வாழ்ந்திட நினைவுகள் உயிரூட்டும்

உதவ நமக்கு யாருமில்லை
உயர்ந்திட உதவி தேவையில்லை
உழைப்பை போன்ற நண்பனில்லை
உன்னை அறிந்தால் தோல்வியில்லை

சிரிப்பை சிக்கனம் செய்யாதே!
சிந்திக்க நீயும் மறக்காதே!
உலகம் பெரியது மறவாதே!
உன்னைக் குறைவாய் நினைக்காதே!

நடந்தால் பாதை உருவாகும்
நல்லெண்ணம் வாழ்க்கை வரம

மேலும்

நன்றி 15-Nov-2021 3:34 pm
நன்றி 15-Nov-2021 3:34 pm
அருமை 14-Nov-2021 3:40 pm
அருமை வாழ்த்துகள் 30-Oct-2021 4:56 pm
சரவிபி ரோசிசந்திரா - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2021 10:33 pm

அன்பென்ற அலையிலே
ஆழியாய் வந்தவனே
தத்தளிக்கும் என் மனத்தை
கரைச் சேர்ப்பது எப்போது
வரமொன்று நான் கேட்க
வரவில்லை உன்னிடமே
தாரமென்று நீ சொல்ல
கேட்க காத்திருக்கு என் மனமே
கோபியர் கொஞ்சல் எல்லாம்
சீக்கிரம் மறந்து விடு
கோமகள் காத்திருக்கேன்
பூமாலை சூட வந்துவிடு
இளமை கோலத்தில்
பார்ப்பவை எல்லாம் அழகாகும்
காலம் கடந்தபின்னே
முதுமையின் கோலம் புரியலாகும்
என்னுயிர் நாதத்தில்
உன்னன்பே அழகாகும்
எந்நாளும் என் சுவாசம்
உனக்காக உயிர்வாழும்
கேட்டு பெறுவதல்ல ஆருயிர் அன்பு அன்பே!
கேட்காமல் பெற்றிடவே
காத்திருக்கேன்
பலகாலம் அனபே!
நீ‌ வருவாய் என வாசலில்
பொற்பாதம் வைக்கிறேன்
உன் வருகையை எண்ண

மேலும்

நெஞ்சார்ந்த நன்றியும் மகிழ்வும் சகோ. 01-Sep-2021 11:37 pm
Kannanai varnithu pesa Varthaigal illai.... Ungal kavidhaiyin varigalum miga miga Arumai.......Vazhthukal.......💐 01-Sep-2021 9:18 pm
சரவிபி ரோசிசந்திரா - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2021 5:24 pm

கவிஞர் என்று சொல்லிக் கொள்ள தகுதி வேண்டும்
தகுதியின்றி கவிஞர் என்றால்
சொற்கள்  ஏசும்
விலைக்கொடுத்து வாங்க இயலும் விருதுயென்றால்
விற்பனைக்கு விலைப்போகும் விளம்பரமா? விருது
சொற்களுக்கு உயிர் கொடுக்கும் கவிஞர் எல்லாம்
தற்பெருமை பேசிக் கொள்(ல்)கின்றனரே!
எல்லாம் தெரியும் எனச் செருக்கு வந்தால்
எல்லாம் மறையும் என மறக்கின்றனரே!
எத்தனைப் பெரிய கவிஞர் நீயென்றாலும்
கண்ணீர் அஞ்சலி மற்றவர்கள் தான் எழுதி தர வேண்டும்.

#சரவிபி_ரோசிசந்திரா

மேலும்

நன்றி சகோ. கட்டாயம் முயற்சி செய்கிறேன். 21-Mar-2021 10:21 pm
கலிவிருத்தம் கவிஞர் என்றிட தக்கமு யற்சியும் கவிஞர் நூல்பல கற்றிட நல்லது கவிஞர் யாப்பதும் கற்றிட போற்றுவர கவியென் றால்பிறர் சொல்திரு டாததே 20-Mar-2021 8:13 pm
ஆமாம் உண்மைதான் சற்று முன் ஒரு உரைநடை வாக்கியம் பட்டறிவு பற்றி எழுதி யிருக்கக் கண்டேன். அந்த உரைநடை சொல்லை ஏன் குறள் வடிவில் எழுத முயற்சிக்க கூடாது. அறியாமல் செய்யும் தவறு தான் நம்மை நமக்கு அறிய வைக்கிறது அறியாமல் செய்யும் தவறொன்றே நம்மை அறியவைக் கும்கருவி யாம் ஓரு சிறிய குறளையும் எழுத முயற்சிக்காது பெரிய பெரிய உரைநடை எழுதும் கும்பல் பெருகி விட்டது என்ன செயய? 20-Mar-2021 7:22 pm
மேலும்...
கருத்துகள்

மேலே