கவிஞர்

கவிஞர் என்று சொல்லிக் கொள்ள தகுதி வேண்டும்
தகுதியின்றி கவிஞர் என்றால்
சொற்கள்  ஏசும்
விலைக்கொடுத்து வாங்க இயலும் விருதுயென்றால்
விற்பனைக்கு விலைப்போகும் விளம்பரமா? விருது
சொற்களுக்கு உயிர் கொடுக்கும் கவிஞர் எல்லாம்
தற்பெருமை பேசிக் கொள்(ல்)கின்றனரே!
எல்லாம் தெரியும் எனச் செருக்கு வந்தால்
எல்லாம் மறையும் என மறக்கின்றனரே!
எத்தனைப் பெரிய கவிஞர் நீயென்றாலும்
கண்ணீர் அஞ்சலி மற்றவர்கள் தான் எழுதி தர வேண்டும்.

#சரவிபி_ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (20-Mar-21, 5:24 pm)
Tanglish : kavignar
பார்வை : 68

மேலே