புறப்படு தமிழ் மகனே

ஒரு கையில் ஓசை உண்டோ
பல கைகள் சேர்ந்தால்
பலத்த ஓசை எழும்.

கூடி வாழ்தல் மனித குலத்துக்கு பெருமை.
சேர்ந்து உழைத்தால்
நாட்டில் செழித்திடும் வளமை.

பண்டம் மாற்றுதலாய்,
கொடுப்பதும் பெறுவதும்
நம் பழமையின் முதிர்ச்சியே.

எத்தனை காலம் வாழ்ந்தோம்
என்பதை காட்டிலும்
எப்படி வாழ்ந்தோம் என்பதே
உள்ளத்தின் சிறப்பு
எண்ணத்தின் உயர்வு.

நம் நாட்டுப் பற்றுதலில்
நலன் கொண்டோர்
சிறை தொட்டு வதைபட்டு
பெற்று தந்த சுதந்திரம்
கயவர் கைப் பிடிக்குள்
சீர் அற்று சிதைவு கொள்ளலாகுமா!

புறப்படு தமிழ் மகனே புறப்படு
சினம் கொண்டு, சீறி எழுந்து

தாய் நாட்டை கைப்பற்றி
தன் கடமையாய் செயலாற்று
.

எழுதியவர் : ஸ்ரீ ஜனகா (20-Mar-21, 4:23 pm)
சேர்த்தது : ஸ்ரீ ஜனகா
பார்வை : 59

மேலே