Rosi - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Rosi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Oct-2021 |
பார்த்தவர்கள் | : 13 |
புள்ளி | : 0 |
கவிஞர் என்று சொல்லிக் கொள்ள தகுதி வேண்டும்
தகுதியின்றி கவிஞர் என்றால்
சொற்கள் ஏசும்
விலைக்கொடுத்து வாங்க இயலும் விருதுயென்றால்
விற்பனைக்கு விலைப்போகும் விளம்பரமா? விருது
சொற்களுக்கு உயிர் கொடுக்கும் கவிஞர் எல்லாம்
தற்பெருமை பேசிக் கொள்(ல்)கின்றனரே!
எல்லாம் தெரியும் எனச் செருக்கு வந்தால்
எல்லாம் மறையும் என மறக்கின்றனரே!
எத்தனைப் பெரிய கவிஞர் நீயென்றாலும்
கண்ணீர் அஞ்சலி மற்றவர்கள் தான் எழுதி தர வேண்டும்.
#சரவிபி_ரோசிசந்திரா
நீயும் நானும் மழைநீரா!
நீந்தும் விழியில் உவர்நீரா!
உணவில் கலந்த உமிழ்நீரா!
உணர்வில் உறைந்த செந்நீரா!
யாரிடம் சொல்ல நம் கதையை
யாருக்கும் யாரும் இங்குமில்லை
எங்கே செல்ல தெரியவில்லை
எனினும் வாழவா வழியில்லை
கடந்தது எல்லாம் போகட்டும்
கடப்பதில் மனம் மகிழட்டும்
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
வாழ்ந்திட நினைவுகள் உயிரூட்டும்
உதவ நமக்கு யாருமில்லை
உயர்ந்திட உதவி தேவையில்லை
உழைப்பை போன்ற நண்பனில்லை
உன்னை அறிந்தால் தோல்வியில்லை
சிரிப்பை சிக்கனம் செய்யாதே!
சிந்திக்க நீயும் மறக்காதே!
உலகம் பெரியது மறவாதே!
உன்னைக் குறைவாய் நினைக்காதே!
நடந்தால் பாதை உருவாகும்
நல்லெண்ணம் வாழ்க்கை வரம