அப்துல்கலாம் ஐயா

*அ*கிலம் போற்றும் மாமனிதரே!

*ஆ*தவனும்
நின்தாள் பணிவான்
உமது நற்பணிக்காக

*இ*ந்தியா 2020இல் வல்லரசாகுமென்றீர்

ஆனால்

*ஈ*ரேழுலகமும் கண்டு அஞ்சுகிறது
ஓர் நுண்ணுயிர் கொல்லியின் முன்பு

*உ*லகத்தை படித்த உத்தமரே!

*ஊ*தியம் ஒன்றே
போதுமென்று நின்ற
செங்கோலே!

*எ*ளிமையின் தூயவரே!

*ஏ*ழ்மையில் பயணித்தவரே !

*ஐ*யமே ,
எழுகிறது
இந்நாடு வல்லரசின்
உச்சத்தை தொடுமா என்று!

*ஒ*ற்றை மனதும் கனக்கிறது

ஐயா!

*ஓ*ய்விடம் தேடி
நீர் சென்றதால்;

*ஔ*டதமாய்
எமக்கு இங்கு வழிகாட்டுவது உமது அறிவுரையே;

*ஃ*க்காய் பெற்று அளக்க சென்றாயோ;
பால்வெளி அண்டத்தை!

உன் பணியை வாழ்த்த வயதில்லாமல்போகவே ;

என்
உயிர்மெய் கொண்டே

உன்தாள் பணிகிறேன்💐💐💐

எழுதியவர் : 🌻சிம்மயாழினி🌻🌷மகாலெட்ச (19-Aug-20, 12:22 am)
சேர்த்தது : சிம்மயாழினி
பார்வை : 78

மேலே