புன்னகை

கல்வைத்த  நகையொன்று 
கண்டேன் கடை 
வாயிலில் என்றாய்...

நீ கொடுத்த உணவில் 
கல்லொன்று கண்டேன் 
கடைவாயில்  என்றேன்... 

கல்வைத்த நகையை  
மறந்து சூடிக்கொண்டாய் 
பல்தெரியும் புன்னகையை!

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து  (19-Aug-20, 12:34 pm)
பார்வை : 128

மேலே