மின்மினி பூச்சிபோல் வெளிச்சம் கொடடி 555

***மின்மினி பூச்சிபோல் வெளிச்சம் கொடடி 555 ***



என்னுயிரே...


எலும்பு கூட்டுக்குள்
இருக்கும் என் இதயம்...

அழகென்று உன்னால்தானடி
உனர்ந்தேன்...

இதய கூட்டில் நான்கு அறைகள்
என்று படித்து இருக்கிறேன்...

நான்கு அறைகளிலும்
வாடகையின்றி...

உரிமையாக
குடியேறினாய் நீ...

உரிமையுடன் உன்
இதயக்கூட்டில் குடியேறினேன்...

என்னை வெறுப்பதேனடி...

கிழக்கில் உதிக்கும் சூரியன்கூட
இன்னும் உதிக்கவில்லை எனக்கு...

நீ பிரிந்த நாள்முதல் என் விழிகளில்
இருள் சூழ்ந்துவிட்டதடி...

மின்மினி பூச்சிபோல்
வெளிச்சம் கொடடி...

இருளையும் ஜெயித்து உன்னை
என் கையில் ஏந்துவேன் தினம்...

பூங்காற்று போல
உன் நினைவுகள்...

எனக்கு இன்பம் கலந்த துன்பம்
கொடுக்குதடி கண்ணே நித்தம்.....



முதல் பூ பெ.மணி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (23-Aug-20, 10:14 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 279

மேலே