நித்தம் என் நெஞ்சுக்குள் துடிப்பவளே 555

உயிரானவளே...


மலர்ந்த மொட்டுக்கள் எல்லாம்
சில நாட்களில் உதிர்ந்துவிடும்...

என்னில் மலர்ந்த
நம் காதலும்...

உன் நினைவும்
என்றும் உதிராதடி...

கல்லூரிக்கு பாடம்
படிக்க வந்த நான்...


உன் மனதை படிக்க
நினைத்தது
என் தவறுதான்...

வாழ்க்கையை எனக்கு
கற்று கொடுத்தாய்...

வாழ்நாளெல்லாம் என்னுடன்
வருவேன் என்றாய்...

கல்லூரியின் இறுதிநாள்வரை
கூட நீ என்னுடன் வரவில்லை...

காரணமின்றி கரணம் சொன்னாய்
என்னைவிட்டு விலக...

காலம் கடந்தும் காத்திருக்கிறேன்
உன்னை சேர்ந்திட...

தாடியே
பிடிக்காத உனக்கு...

இன்று தாடிக்குள்
மறைத்து
வைத்திருக்கிறேன்...

நீ கிள்ளி விளையாடிய
என் கன்னங்களை....

முதலும் இறுதியும்
என்னை ரசித்தவள்...

நீ மட்டும்தான்
இருக்க வேண்டும்...

என் வாழ்க்கை
புத்தகத்தில் என்றும்.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (22-Aug-20, 6:12 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 691

மேலே