உன் பாதையில் நீ செல்

உன் பாதையில்
நீ செல் ....

உன்னை தேடிவரும்
மானிடருக்கு
ஆலோசனை சொல் ...

உன்னை மதிக்கும்
சிலருக்கு சிவப்பு
கம்பளம் விரி....

ஆனால்

உன்னைப் போலவே
மாறவேண்டும் என்று
ஒருநாளும் நினைத்திடாதே ......

நீ- நீயாக இருக்க
நினைக்கும்போது
அடுத்தவர் ஏன் ?
உன்னைப்போல மாறவேண்டும்
என்று நினைக்கிறாய் ....

உன்னை மாற்றிகொள்
நீ நிலவாய்
காட்சி தருவாய்
பிறரை மாற்ற நினைத்தால்
உன் மார்பிலே
நீயே குத்தி கொள்கிறாய்.

எழுதியவர் : இரா . அரிகிருஷ்ணன் (27-Aug-20, 4:51 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 360

மேலே