காரமர் மேனியனே கற்பக பூந்தருவே இன்றையத் துதி

காரமர் மேனியனே கற்பக பூந்தருவே
தாரமர் தேன்செண் பகச்சந் தனத்திருவே
ஊரவர் சங்கடம்தீர் நாயகா என்மனத்
தேரமர் இன்று மகிழ்ந்து !

கார் ---கருமுகில் தார் ---அணியும் மாலை

கற்பக பூந்தருவே --- கற்பக மரம் --நினைத்ததைக் கொடுக்கும்

சந்தனத்திருவே ----சந்தனம் மார்பில் பூசிய அழகனே

மனத்தேர் ---விளக்கம் தேவை இல்லை .

பா வடிவம் ---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (5-Sep-20, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே