செந்தமிழ் நாட்டுப் பக்திச் செல்வங்களே

நவில்நா கொடுத்தான் நமச்சிவாய நாமம் சொல்லிட
கவின்திரு நன்நெற்றி வெண்ணீறு விரித்துத் தினம்பூசிட
நவில்நல் வாய்தேவா ரத்திருவாச கம்நித்தம் ஓதிட
செவிமடுப்பீர் செந்தமிழ் நாட்டுப் பக்திச் செல்வங்களே !

நாகொடுத் தான்நமச்சி வாயநாமம் சொல்லிட
நன்நெற் றிகொடுத்தான் வெண்ணீறு பூசிட
வாய்கொடுத் தான்திரு வாசகம்நீ ஓத
செவிசாய்ஓ தாவிடி னும் !

-----௧ . கலித்துறை ௨ . இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (3-Sep-20, 10:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே