செந்தமிழ் நாட்டுப் பக்திச் செல்வங்களே
நவில்நா கொடுத்தான் நமச்சிவாய நாமம் சொல்லிட
கவின்திரு நன்நெற்றி வெண்ணீறு விரித்துத் தினம்பூசிட
நவில்நல் வாய்தேவா ரத்திருவாச கம்நித்தம் ஓதிட
செவிமடுப்பீர் செந்தமிழ் நாட்டுப் பக்திச் செல்வங்களே !
நாகொடுத் தான்நமச்சி வாயநாமம் சொல்லிட
நன்நெற் றிகொடுத்தான் வெண்ணீறு பூசிட
வாய்கொடுத் தான்திரு வாசகம்நீ ஓத
செவிசாய்ஓ தாவிடி னும் !
-----௧ . கலித்துறை ௨ . இன்னிசை வெண்பா