பெண்ணே என்னை விட்டு விலகாதே

நீ
எனக்கு நடக்கும்
நன்மையைக் கண்டு
சந்தோஷம் அடைகிறாய்!
நீ
எனக்கு நேரும் துன்பங்களைக்
கண்டு கண்ணீர்
சிந்துகிறாய்!
நாம்
பிறப்பால் ஒன்றாக
பிறந்தவர்கள் இல்லை யே!
நம்
உணர்வுகள் மட்டும்
ஒன்றாக இருப்பது
ஏனோ!
ஏன்
என்று தெரியாமல்
போனாலும் போகட்டும்.
நீ
மட்டும் என்னை விட்டு
விலகாதே!
என்
அன்பு தோழியே!
°°°°துரைராஜ் ஜிவிதா°°°°