நமோ நாராயணா
திருப்பதி தனில் வாழும்
கோவிந்தா
தினம் உன்னை துதிக்கின்றோம்
குறைதீர்க்க எழுந்துவா
ஏழுமலை வாசா
அகிலம் காக்கும் எங்கள் சீனிவாசா
உனைக் காண வரும்
மக்களுக்கு காவல் நீயே நேசா
ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ நாராயணா
பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமானே
மானிடராய் பிறந்த பாவம் கழிய
உன் திருவடியே சரணம் என காண
காத்திருக்கும் ஜனங்கள் கோடியே...
இனி ஒரு பிறவி நாங்கள் பிறவாமல் இருக்க
ஆபத்பாந்தவா,
அனாத ரட்சகா,
ஏழுமலையானே
எங்களை ரட்சிப்பாயா
இந்த உலக இன்னல்களிலிருந்து விடுவிப்பாயாjQuery171032642408827492053_1599956664604
ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ நாராயணா
என மனதார உன்னை கூப்பிடும்
எங்கள் குரல் கேட்டு
மலையிறங்கி வந்திடு
இந்த உலகம் அமைதி பெற
நீ படைத்த உயிர்களாகிய
நாங்கள் உன் நினைவில் நிம்மதியுடன் வாழ்ந்திட
அருள் தந்திடு
ஓம் நமோ நாராயணா
நீ வருவாய்
அருள் தருவாய்
என்ற நம்பிக்கை எண்ணத்தில்
என்றும் என்றென்றும்
ஜீவன்