வித்தாகவோ விருட்சமாகவோ

துவளாது அயராது துணிவோடு
நிலையான மனமதன் துணையோடு
பணியின் வீரியத்திற்கு இணையாக
திறனோடு உழைப்பை கொடுத்திடுங்கால்

தெளிவான முடிவுதனை அடைந்திடலாம்
அடைந்த முடிவுகள் அற்புதமாய்
அளவற்ற நம்பிக்கையை நம்முள்ளாக்கும்
நம்பியே அதனூடே சென்றிடுங்கால்

அழியாத புகழ்தன்னை நமக்களிக்கும்
புகழென்ற புத்தாடையை அணிந்தவாரே
புதுபுதியதாய் புலம்பெயர்ந்து தேடியவாறு
திரட்டிய செய்திகளை சேர்த்திடுங்கால்

அரிதான செய்தியால் ஆராவரிப்போம்
செய்திகளை சீராக்கி செம்மை செய்து
சிதறாமல் அதன் மூலம் அறிந்துக்கொண்டு
சென்று அதன் பிறப்பிடம் நோக்கிடுங்கால்

உலகுக்கு புதுவித்து கிடைக்குந்தானே
வித்தாகவோ விருட்சமாகவோ கிடைத்ததை
நன்றாக பற்றியபடி பயணம் செய்தால்
தீமையின்றி வாழ்வின் வழி வளமாகுமே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Sep-20, 7:37 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 37

மேலே