யாருமற்ற நேரத்தில்

யாருமற்ற வீட்டினுள்
சொல்லாமல் கொள்ளாமல்
தைரியமாக நுழைந்தாலும்
யாராவது வந்து சட்டெனக்
கதவைத் தட்டும் போதே
கோழையைப்போல
சொல்லாமல் கொள்ளாமல்
மாயமாய் மறைந்து விடுகிறது
இந்தப் பொல்லாதத் தனிமை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Oct-20, 1:27 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 171

மேலே