உன்காதல்

என்னதான் எப்படித்தான் கார்மேகம் கதிரவனை
தன்னால் முடியும்வரை மறைத்திட பார்க்கினும்
ஆதவன் ஒளிரோ உள்ளின்று ஒளிரும்
அதுவே மழைக்கால பகற் பொழுது
கண்ணே உன்னுள் என்மேல் நீகொண்ட
காதல் பரவி ஒளிர என்னைநீ
பார்க்கும் போதெல்லாம் உன்நாணம்
அதை சூரியனை மறைக்கும் கார்மேகம்போல
மறைக்க உந்தன் முகத்தில் ஒளிருதே
கதிரவனே காணாத பகல் போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Oct-20, 2:09 pm)
பார்வை : 312

மேலே