கொடை வள்ளல்கள்
நதியும் மழையும் இயற்கையின் இருபெரும்
கொடை வள்ளல்கள், கொடுப்பதொன்றே
தெரியும் நதிக்கும் மழைக்கும் இல்லாது
வறண்டபோதும் அள்ளி அள்ளி தரும்
நதி வெள்ளி மணலை பாவம் நீரில்லா
மேகம் மக்களின் வசை அத்தனையும்
சுமக்கும் பழி சுமக்கும் பூமித்தாய்போல்