புஞ்சை விவசாயி
நீல வானில்
நீந்தும் வெண்மேகங்கள்
நிறைய விண்மீன்கள்.
வானம் பார்த்தவனுக்கு
வந்தது -
உவகை அல்ல; அழுகை !
எள்ளும் நெல்லும்
கம்பும் சோளமும்
பருத்தியும் மல்லியும்
உளுந்தும் வரகுமாய்
மாற்றி மாற்றி
மானம் பார்த்த
விவசாயம் பார்க்கும்
புஞ்சை விவசாயி
அவன் !
- தீ.கோ.நாராயணசாமி.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
