என் மொத்தமும் நீ

மிகச்சிறந்த நட்பும்..
அழகிய திமிறும்..
நம்பிக்கையும் நிறைந்த தோழனே..

ஸ்பரிசம் என்பது எவ்வளவு அழகான ஓர் உணர்வு,
அன்பையோ , ஆறுதலையோ,
நட்பையோ, ஒரு வினாடி அணைப்பையோ,
கை பிடித்தலையோ, தோளில் சாயும் இனக்கமான
நேரத்தையோ கடத்துவது போல்
வேறென்ன வார்த்தையால் நிகழ்த்தி விட முடியும்.

திட்டம் தீட்டியோ, வட்டமிட்டோ வளைத்துவிட
நினைக்கவில்லை.
என் நம்பிக்கை நிறைந்தவன் நீ..
என் மனதின் புதுப்பித்தலானுக்கான மாறுதல் நீ
மனதிற்கு கிடைத்த ஆறுதல்.
என் பைத்தியக்காரத்தனத்திற்கு
உன்னைத்தவிர்த்து
அனைவரிமோ மருந்தெடுப்பது சரியாகாது

உன் தாயையோ, தந்தையையோ
ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பனையோ
உன்னால் நேசிக்க முடியுமானால்..
உன் மனதிலும் எனக்கான
ஒரு சிறு இடம் இருக்காதா..

நின்று நிதானித்து , ஆராய்ந்தால்
அந்த நொடி காணாமலே போய்
விடுமோ என்ற உள்ளுரும் ஒரு பயம்!
தானாக வந்து மனமேறி
நீ கோலோச்சிய சில நொடி நேரத்திலே
பற்றிக் கொண்ட பயம் ..
எத்தனை நேரம்..
எத்தனைக்காலம் காத்திருக்கலாம்
என்று யோசித்தபோது
அன்பு மொத்தமும் நீயானதால்
மொத்தமும் காத்திருக்கலாம்
காத்திருப்பேன்.

எழுதியவர் : கலையரசன் ஜெயதேவி (16-Nov-20, 8:57 pm)
சேர்த்தது : Jayadevi
பார்வை : 1018

மேலே