Jayadevi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Jayadevi |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 11-May-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 232 |
புள்ளி | : 6 |
தென்றல்.....
அன்று தான் முதல் நாள் லாக்டவுன், ஒரு வித பதற்றம், பயத்தோடுதான் அலுவலகம் செல்ல தயாரானேன்.
கறுப்பு நிற உடையில், மாஸ் அணிந்து பாதி முகத்தை மறைத்து, நான் முதலில் பார்த்தது அந்த இருவிழிகளை மட்டும் தான்.
சார்.. வந்து ரொம்ப நேரம் ஆச்சா என்றேன்… இல்லீங்க இப்போதான் வந்தேன் என்று பதில் வந்தது
.. அடுத்து பயணித்த அரைமணி நேரமும் ஒரு நீண்ட பெரிய மௌனம்…
அடுத்த சில நாட்கள் கழித்து உன்னை பார்த்தேன்…அப்போதும் உன் முகம் பரிச்சியமாகவில்லை..அதிகம் பழக்கமானது உன் விழிதான்.. நான் அதிகம் பார்த்ததும் அதைத்தான்…
சார்..வந்து ரொம்ப நேரம் ஆச்சா என்றேன்.. இல்லீங்க இப்போத்தான் என்றாய்…அதே ஒற்றை வார்த்தை..
மிகச்சிறந்த நட்பும்..
அழகிய திமிறும்..
நம்பிக்கையும் நிறைந்த தோழனே..
ஸ்பரிசம் என்பது எவ்வளவு அழகான ஓர் உணர்வு,
அன்பையோ , ஆறுதலையோ,
நட்பையோ, ஒரு வினாடி அணைப்பையோ,
கை பிடித்தலையோ, தோளில் சாயும் இனக்கமான
நேரத்தையோ கடத்துவது போல்
வேறென்ன வார்த்தையால் நிகழ்த்தி விட முடியும்.
திட்டம் தீட்டியோ, வட்டமிட்டோ வளைத்துவிட
நினைக்கவில்லை.
என் நம்பிக்கை நிறைந்தவன் நீ..
என் மனதின் புதுப்பித்தலானுக்கான மாறுதல் நீ
மனதிற்கு கிடைத்த ஆறுதல்.
என் பைத்தியக்காரத்தனத்திற்கு
உன்னைத்தவிர்த்து
அனைவரிமோ மருந்தெடுப்பது சரியாகாது
உன் தாயையோ, தந்தையையோ
ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பனையோ
உன்னால
பயணம் ஒரு அற்புதமான அனுபவம், அதுவும் ஜன்னல் ஓர இருக்கை என்றால் மனம் றெக்கை கட்டி பறக்கும். மனதிற்கு பிடித்ததை அசை போட்டு யாருக்கும் தெரியாமல் சிரிப்பது. மனம் காயம்பட்ட நினைவுகளை எண்ணி விழி புலம்பி நனையும் போது ஆறுதலாய் நான் இருக்கேன் என்று, என்னை வருடி என் கண்ணீரை துடைத்து செல்லும் தென்றல் காற்றும். பிடித்த பாடலை கேட்டு கொண்டு, தளத்திற்கு ஏற்றவாறு தலை அசைத்து. பாடலை சத்தமில்லாமல் முணுமுணுக்கும் உதட்டை கடிந்து அமைதி ஆக்குவதும். சிரிப்பது, அழுவது, பின்பு நெகிழ்ந்து என்னை மறப்பது. என் வாழ்வை அழகாக்கும் பயணம் மீதம் உள்ள நாளை சுவையார்க்கும்.
பயணம் ஒரு அற்புதமான அனுபவம், அதுவும் ஜன்னல் ஓர இருக்கை என்றால் மனம் றெக்கை கட்டி பறக்கும். மனதிற்கு பிடித்ததை அசை போட்டு யாருக்கும் தெரியாமல் சிரிப்பது. மனம் காயம்பட்ட நினைவுகளை எண்ணி விழி புலம்பி நனையும் போது ஆறுதலாய் நான் இருக்கேன் என்று, என்னை வருடி என் கண்ணீரை துடைத்து செல்லும் தென்றல் காற்றும். பிடித்த பாடலை கேட்டு கொண்டு, தளத்திற்கு ஏற்றவாறு தலை அசைத்து. பாடலை சத்தமில்லாமல் முணுமுணுக்கும் உதட்டை கடிந்து அமைதி ஆக்குவதும். சிரிப்பது, அழுவது, பின்பு நெகிழ்ந்து என்னை மறப்பது. என் வாழ்வை அழகாக்கும் பயணம் மீதம் உள்ள நாளை சுவையார்க்கும்.
கடந்து போன காலங்களும்...
கறைந்து போன நிமிடங்களும்...
சில ஆண்டுகள் முன் சென்றால்...
இன்று உனக்கானவலாக
நான் இருந்து இருப்பேன்...
என்றோ தொலைந்த
நினைவுகளில் நிழலாடுகிறது
நம் காதல்
நிஜங்களை தொலைந்து
நிழலை தேடுகிறேன்...
நிழலின் தோளிலே
இளைப்பாருகிறேன்...
நிழலின் பிம்பத்தை உறவாகி
உயிர் வாழ்கிறேன்...
நிழல் நிஜமாகுமா?இல்லை?
நிழலாக மட்டுமே
தொடருமா உன் உறவு?
கடந்து போன காலங்களும்...
கறைந்து போன நிமிடங்களும்...
சில ஆண்டுகள் முன் சென்றால்...
இன்று உனக்கானவலாக
நான் இருந்து இருப்பேன்...
என்றோ தொலைந்த
நினைவுகளில் நிழலாடுகிறது
நம் காதல்
நிஜங்களை தொலைந்து
நிழலை தேடுகிறேன்...
நிழலின் தோளிலே
இளைப்பாருகிறேன்...
நிழலின் பிம்பத்தை உறவாகி
உயிர் வாழ்கிறேன்...
நிழல் நிஜமாகுமா?இல்லை?
நிழலாக மட்டுமே
தொடருமா உன் உறவு?
உனக்குள் நான் ரகசியம்...
எனக்குள் நீ ரகசியம்...
உன் சினுங்களின் ரகசியம்...
என் செவிக்கு ரகசியம்...
உன் விரலின் ரகசியம்...
என் மேனிக்கு ரகசியம்...
உன் முதல் பதிப்பின் ரகசியம்...
என் இதழின் ரகசியம்...
உன் அணைப்பின் ரகசியம்...
என்னுள் பரமரகசியம்...
யாருக்கும் சொல்லாதே... இது
நம் ரகசியம்...
காதலில் காதலை தொலைத்து காதலை தேடினேன்...
அன்பின் மிகுதியால் உனக்கும் எனக்கும் வரும் சண்டையில் தொலைந்ததா...
உயிரறுத்த வார்த்தைகளால் பெருகிவரும் கண்ணீரில் கரைந்தா...!
நீ அறைந்து சிவந்த கன்னத்தின் விரல் பதிப்பில் மறைந்ததா...!
இல்லை, லட்ச முத்ததின் எச்சத்தில் காய்ந்ததா...!
சினத்தில் சிதைந்ததா!
ஆசையில் அழிந்ததா!
எங்கு மாண்டு..
எங்கு புதைந்தது நம் காதல்...!
தொலைந்த காதலே ஒரு முறை வந்து போ....!
இறுதியாக சுவாசிக்க ...!