காதல்
இயற்கையும் தோற்றுப்போகும் என்னவள் ஆழகின்முன்
அழகிய அந்திவேளையில்
ஆதவன் அழகை கண்டு
மேகம் கன்னம் சிவந்திட
செவ்வானம் உருவானது
அவ்வானம் பிம்பம் பட்டு
கடலும் தங்கமாய் மின்னிட
அதில் துள்ளி விளையாடிய
மீன்கள் வெள்ளியாய் மின்னிட
கரையோரம் வீசிய ஈரக்காற்றிலே
என்னவள் இயற்கை அழகை ரசிக்க
நானோ அவள் ரசிக்கும் அழகை ரசித்தேன்
-இணைய தமிழன்