வலி தெரியாமல் என் உயிரை மெல்ல மெல்ல உறிஞ்சுகிறாய் நீ 555

என்னுயிரே...


என் உள்ளத்தில்

இருக்கு
ம் உன்னை...

நேரில் சந்திக்காமல் உன்னுடன்
பேசாமலும் இருந்தாலும்...

என் உள்ளத்தில் நீதான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்...

பகலும் இரவும் காணும்
இடமெல்லாம் உன் விழிகள்தான்...

உன் விழிகளை பார்த்து
காதலை சொன்னதால்...

நான் காணும் இடமெல்லாம்
பொருளெல்லாம் உன் விழிகள் மட்டுமே...

காதல் பெயரில் உன்னிடம்
காமத்தை தேடவில்லை நான்...

காதல் உள்ளத்தை
மட்டும் தேடுகிறேன்...

பூ போன்ற என் இதயத்தில்
வண்ணத்துபூச்சி போல கொட்டி...

வலி தெரியாமல் என் உயிரை
மெல்ல மெல்ல உறிஞ்சுகிறாய் நீ...

என் காதல் நிலவே...

துடிக்க வைக்காதே
என் இதயத்தை இனியும்.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (5-Dec-20, 4:28 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1264

மேலே